பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய முக்கியமான வீரர்களில் ஒருவர்தான் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் .
'நான் வாழும் சொந்த பூமிக்கு யாரோ வேறு நாட்டு அயலானுக்கு கப்பம் கட்டுவதா.. எங்கிருந்தோ வந்து இந்திய மண்ணை சூறையாடிய ஆங்கிலேயனுக்கு ஒரு பொழுதும் அடிபணிய முடியாது' என வீர முழக்கத்தோடு ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்த மாபெரும் வீரர்.
வாழும் தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து, அவர்களை எதிர்த்து யுத்தம் புரிந்தவர். இந்திய சுதந்திர வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தவரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் தெரிந்து கொள்வது இந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை ஆகும்.
No product review yet. Be the first to review this product.