புதுச்சேரியின் வரலாற்றையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் அறிந்து கொள்வதற்கான ஆதாரப்பூர்வமான விரிவான பதிவுகள் அதிகமில்லை. புதுச்சேரி மண்ணின் மைந்தரான எம்.பி. இராமன் பல்லாண்டுக்கால ஆய்வின் அடிப்படையில் எழுதிய ‘ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)’, ‘ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)’ ஆகிய நூல்கள் இந்தக் குறையைப் போக்குகின்றன. இந்த நூல்களின் தொடர்ச்சியாக ஃபிரெஞ்சியரின் காலனிய ஆதிக்கப் பிடியிலிருந்து புதுச்சேரி விடுபட்ட வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது.
புதுச்சேரியில் விடுதலைப் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை, ஃபிரெஞ்சியர்கள் தாமாகவே கிளம்பிவிட்டார்கள் என்பன போன்ற பொதுக்கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக மறுத்து, புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.